சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
8.119
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே பண் - ஏரார் இளங்கிளியே (கோயில் (சிதம்பரம்) ) Audio: https://sivaya.org/thiruvaasagam/19 Thiruchathagam Thiruvasagam.mp3 |
8.147
மாணிக்க வாசகர்
திருவாசகம்
திருவெண்பா - வெய்ய வினையிரண்டும் பண் - ஏரார் இளங்கிளியே (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ) Audio: https://sivaya.org/thiruvaasagam/47 Thiruvenba Thiruvasagam.mp3 |
8.148
மாணிக்க வாசகர்
திருவாசகம்
பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும் பண் - ஏரார் இளங்கிளியே (திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ) Audio: https://sivaya.org/thiruvaasagam/48 Pandaaya Naanmara Thiruvasagam.mp3 |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.119  
திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே
பண் - ஏரார் இளங்கிளியே (திருத்தலம் கோயில் (சிதம்பரம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நேரிசை வெண்பா
ஏர் ஆர் இளம் கிளியே! எங்கள் பெருந்துறைக் கோன் சீர் ஆர் திரு நாமம் தேர்ந்து உரையாய் ஆரூரன், செம் பெருமான்,' வெள் மலரான், பால் கடலான், செப்புவ போல், எம் பெருமான், தேவர் பிரான்,' என்று. | [1] |
ஏதம் இலா இன் சொல் மரகதமே! ஏழ் பொழிற்கும் நாதன், நமை ஆளுடையான், நாடு உரையாய் காதலர்க்கு அன்பு ஆண்டு, மீளா அருள் புரிவான் நாடு, என்றும், தென் பாண்டி நாடே, தெளி. | [2] |
தாது ஆடு பூஞ்சோலைத் தத்தாய்! நமை ஆளும் மாது ஆடும் பாகத்தன் வாழ் பதி என்? கோதாட்டிப் பத்தர் எல்லாம் பார்மேல், சிவபுரம்போல், கொண்டாடும் உத்தரகோசமங்கை ஊர். | [3] |
செய்ய வாய்ப் பைம் சிறகின் செல்வீ! நம் சிந்தை சேர் ஐயன், பெருந்துறையான், ஆறு உரையாய் தையலாய்! வான் வந்த சிந்தை மலம் கழுவ வந்து, இழியும் ஆனந்தம் காண், உடையான் ஆறு. | [4] |
கிஞ்சுக வாய் அம் சுகமே! கேடு இல் பெருந்துறைக் கோன் மஞ்சு மருவு மலை பகராய் நெஞ்சத்து இருள் அகல வாள் வீசி, இன்பு அமரும் முத்தி அருளும் மலை என்பது காண், ஆய்ந்து. | [5] |
இப் பாடே வந்து, இயம்பு; கூடு புகல் என்? கிளியே! ஒப்பு ஆடாச் சீர் உடையான் ஊர்வது என்னே? எப்போதும் தேன் புரையும் சிந்தையர் ஆய், தெய்வப் பண் ஏத்து இசைப்ப, வான் புரவி ஊரும், மகிழ்ந்து. | [6] |
கோல் தேன் மொழிக் கிள்ளாய்! கோது இல் பெருந்துறைக் கோன், மாற்றாரை வெல்லும் படை பகராய் ஏற்றார் அழுக்கு அடையா நெஞ்சு உருக, மும் மலங்கள் பாயும் கழுக்கடை காண், கைக்கொள் படை. | [7] |
இன் பால் மொழிக் கிள்ளாய்! எங்கள் பெருந்துறைக் கோன் முன்பால் முழங்கும் முரசு இயம்பாய் அன்பால், பிறவிப் பகை கலங்க, பேரின்பத்து ஓங்கும், பரு மிக்க நாதப் பறை. | [8] |
ஆய மொழிக் கிள்ளாய்! அள்ளூறும் அன்பர்பால் மேய பெருந்துறையான் மெய்த் தார் என்? தீய வினை நாளும் அணுகாவண்ணம் நாயேனை ஆளுடையான், தாளி அறுகு ஆம், உவந்த தார். | [9] |
சோலைப் பசும் கிளியே! தூ நீர்ப் பெருந்துறைக் கோன் கோலம் பொலியும் கொடி கூறாய் சாலவும் ஏதிலார் துண் என்ன, மேல் விளங்கி, ஏர் காட்டும் கோது இலா ஏறு ஆம், கொடி. | [10] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.147  
திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்
பண் - ஏரார் இளங்கிளியே (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நேரிசை வெண்பா
வெய்ய வினை இரண்டும் வெந்து அகல, மெய் உருகி, பொய்யும் பொடி ஆகாது; என் செய்கேன்? செய்ய திரு ஆர் பெருந்துறையான் தேன் உந்து செம் தீ மருவாது இருந்தேன் மனத்து. | [1] |
ஆர்க்கோ? அரற்றுகோ? ஆடுகோ? பாடுகோ? பார்க்கோ? பரம்பரனே, என் செய்கேன்? தீர்ப்பு அரிய ஆனந்த மால் ஏற்றும் அத்தன், பெருந்துறையான் தான்' என்பார் ஆர் ஒருவர் தாழ்ந்து? | [2] |
செய்த பிழை அறியேன்; சேவடியே, கை தொழுதே, உய்யும் வகையின் உயிர்ப்பு அறியேன் வையத்து இருந்து, உறையுள் வேல் மடுத்து, என் சிந்தனைக்கே கோத்தான் பெருந்துறையில் மேய பிரான். | [3] |
முன்னை வினை இரண்டும் வேர் அறுத்து, முன் நின்றான் பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன்; தென்னன்; பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன்; வரும் துயரம் தீர்க்கும் மருந்து. | [4] |
அறையோ, அறிவார்க்கு? அனைத்து உலகும் ஈன்ற மறையோனும், மாலும், மால் கொள்ளும் இறையோன்; பெருந்துறையுள் மேய பெருமான்; பிரியாது இருந்து உறையும், என் நெஞ்சத்து இன்று. | [5] |
பித்து என்னை ஏற்றும்; பிறப்பு அறுக்கும்; பேச்சு அரிது ஆம்; மத்தமே ஆக்கும், வந்து, என் மனத்தை; அத்தன், பெருந்துறையான், ஆட்கொண்டு பேர் அருளால் நோக்கும் மருந்து, இறவாப் பேரின்பம், வந்து. | [6] |
வாரா வழி அருளி வந்து, எனக்கு மாறு இன்றி, ஆரா அமுதாய் அமைந்தன்றே சீர் ஆர் திருத்தன், பெருந்துறையான், என் சிந்தை மேய ஒருத்தன், பெருக்கும் ஒளி. | [7] |
யாவர்க்கும் மேல் ஆம் அளவு இலாச் சீர் உடையான், யாவர்க்கும் கீழ் ஆம் அடியேனை, யாவரும் பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு, என் எம்பெருமான்! மற்று அறியேன் செய்யும் வகை. | [8] |
மூவரும், முப்பத்து மூவரும், மற்று ஒழிந்த தேவரும், காணாச் சிவபெருமான் மா ஏறி, வையகத்தே வந்திழிந்த வார் கழல்கள் வந்திக்க, மெய்யகத்தே இன்பம் மிகும். | [9] |
இருந்து என்னை ஆண்டான் இணை அடியே சிந்தித்து இருந்து, இரந்துகொள், நெஞ்சே! எல்லாம் தரும் காண் பெருந்துறையில் மேய பெரும் கருணையாளன், மருந்து உருவாய், என் மனத்தே, வந்து. | [10] |
இன்பம் பெருக்கி, இருள் அகற்றி, எஞ்ஞான்றும் துன்பம் தொடர்வு அறுத்து, சோதி ஆய், அன்பு அமைத்து, சீர் ஆர் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே ஊர் ஆகக் கொண்டான், உவந்து. | [11] |
Back to Top
மாணிக்க வாசகர் திருவாசகம்
8.148  
பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்
பண் - ஏரார் இளங்கிளியே (திருத்தலம் திருப்பெருந்துறை ஆவுடையார்கோயில் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நேரிசை வெண்பா
பண்டு ஆய நான்மறையும் பால் அணுகா; மால், அயனும், கண்டாரும் இல்லை; கடையேனைத் தொண்டு ஆகக் கொண்டருளும் கோகழி எம் கோமாற்கு, நெஞ்சமே! உண்டாமோ கைம்மாறு? உரை. | [1] |
உள்ள மலம் மூன்றும் மாய, உகு பெரும் தேன் வெள்ளம் தரும், பரியின் மேல் வந்த, வள்ளல் மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள்; வாழ்த்த, கருவும் கெடும், பிறவிக் காடு. | [2] |
காட்டகத்து வேடன்; கடலில் வலை வாணன்; நாட்டில் பரிப் பாகன்; நம் வினையை வீட்டி, அருளும் பெருந்துறையான்; அம் கமல பாதம், மருளும் கெட, நெஞ்சே! வாழ்த்து. | [3] |
வாழ்ந்தார்கள் ஆவாரும், வல் வினையை மாய்ப்பாரும், தாழ்ந்து உலகம் ஏத்தத் தகுவாரும் சூழ்ந்து அமரர் சென்று, இறைஞ்சி, ஏத்தும் திரு ஆர் பெருந்துறையை நன்று இறைஞ்சி, ஏத்தும் நமர். | [4] |
நண்ணிப் பெருந்துறையை, நம் இடர்கள் போய் அகல, எண்ணி எழு கோகழிக்கு அரசை, பண்ணின் மொழியாளோடு உத்தரகோசமங்கை மன்னிக் கழியாது இருந்தவனை, காண். | [5] |
காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் என, பேணும் அடியார் பிறப்பு அகல, காணும் பெரியானை, நெஞ்சே! பெருந்துறையில் என்றும் பிரியானை, வாய் ஆரப் பேசு. | [6] |
பேசும் பொருளுக்கு இலக்கிதம் ஆய், பேச்சு இறந்த மாசு இல் மணியின் மணி வார்த்தை பேசி, பெருந்துறையே என்று, பிறப்பு அறுத்தேன் நல்ல மருந்தின் அடி என் மனத்தே வைத்து. | [7] |